இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை?

கிளிநொச்சி இயக்கச்சி இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு உயிரைமாய்த்துள்ளார்.

இவர் இன்று அதிகாலை கடமையில் இருந்ததாகவும் அப்போதே தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரத்தினபுரியை சேர்ந்த 28 வயதுடைய சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.