இயக்குநர் மு.களஞ்சியம் மீதான தாக்குதலை சிறிலங்கா இராணுவம் மறுக்கின்றது

தமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என சிறிலங்கா இராணுவம் மறுத்துள்ளது.

மாவீரர் நாளை முன்னிட்டு இலங்கை, யாழ்ப்பாணத்திற்கு தமிழக திரைப்பட இயக்குநர் களஞ்சியம் சென்றிருந்தார். அங்கிருந்து மீண்டும் கொழும்பு திரும்பும் போது, யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் வைத்து தம்மை சிறிலங்கா இராணுவம் தாக்கியதாக களஞ்சியம் கூறியிருந்தார்.

மேலும் உங்கள் தலைவர் சீமானா? புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கத் தான் வந்துள்ளீர்களா? என கேட்டு தாம் தாக்கப்பட்டதாக களஞ்சியம் கூறியிருந்தார். ஆனால் இத்தாக்குதல் சம்பவத்தை சிறிலங்கா இராணுவம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இராணுவ செய்தித் தொடர்பாளர் சுமித் அத்தப்பத்து இப்படியான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார்.