இந்த நாடு பிளவுபடுவதைத் தவிர வேறு வழியில்லை – எம்.கே.சிவாஜிலிங்கம்

இலங்கை என்ற ஓர் ஆட்சி அதிகாரத்திற்குக் கீழே ஒரு அரசியல் தீர்வையோ அல்லது வேறு ஏதையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இவ்வாறான நிலை தொடருமானால் இந்த நாடு பிளவுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத்தான் மரணதண்டணை விதிக்கப்பட்ட இரானுவ அதிகாரி பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதை எடுத்துக் காட்டுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எம்.கே.சிவாஐpலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

‘யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டுப் பேரை படுகொலை செய்த பிரதான குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றவாளிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்துள்ளார்.

இதேபோல்இ திருகோணமலையில் குமாரபுரத்தில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி திருகோணமலையில் இடம்பெற்ற வழக்கை அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றி நீதி மறுக்கப்பட்டது. அத்தகைய கொலைகளைச் செய்தவர்களை ஜனாதிபதியும் இலங்கை அரசாங்கமும் பொதுமன்னிப்பளித்து விடுதலைசெய்து வருகின்றது.

இத்தகைய சம்பவங்களைச் செய்துவரும் ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் தமிழ் மக்களைப் படுகொலை செய்தது சரி என்பதை நிலைநாட்டி வருகின்றமையால் இலங்கைக்குள் இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை என்பதை எங்களுக்கு நூறு வீதம் புரியவைத்துள்ளார்கள். தமிழ் மக்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த சூழ்நிலையின் பின்னணியில்தான் நாங்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளைச் செய்யவேண்டும்.

இதேவேளை, ஜனாதிபதி சிங்கள பௌத்த பேரினவாத ஜனாதிபதியில்லை என்பதை நிரூபிப்பவராக இருந்தால் ஆகக்குறைந்தது 15 வருடங்களுக்கு மேலே தண்டனை வளங்கப்பட்டவர்கள் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை (அரசியல் கைதிகள்) முதற்கட்டமாகவும் பத்து வருடங்களுக்கு மேலே சிறைச்சாலையில் இருப்பவர்களை இரண்டாவது கட்டமாகவும், ஏனையவர்களை மூன்றாவது கட்டமாகவும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யாதுவிடின் நாங்கள் இலங்கை என்ற ஓர் ஆட்சி அதிகாரத்திற்குக் கீழே ஒரு அரசியல் தீர்வையோ அல்லது வேறு ஏதையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இவ்வாறான நிலை தொடருமானால் இந்த நாடு பிளவுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத்தான் இத்தகைய செயற்பாடு எடுத்துக் காட்டுகின்றது.