இந்தோனேசிய விமானம் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக தகவல்

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்தோனேசிய பயணிகள் விமானத்தை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

காணாமல் போன விமானம் ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 -500 என்ற இரகத்தைச் சேர்ந்தது. உள்நாட்டிற்குள்ளேயே ஒரு நகரத்திலிருந்து,   மற்றொரு நகரத்துக்கு இந்த விமானம் பயணம் செய்ததாகவும்  தகவல் தெரியவந்திருக்கிறது.

தற்போது காணாமல் போன பயணிகள் விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியுள்ளனர். அந்த விமானத்தில் 150க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.