இந்தோனேசிய நீர் மூழ்கிக் கப்பல், 53 வீரர்களுடன் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு

இந்தோனேசிய(Indonesia) கடற்படையை சேர்ந்த கேஆர்ஐ நாங்கலா 402 என்கிற நீர் மூழ்கிக் கப்பல், 53 வீரர்களுடன் காணாமல் போய்விட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

மேலும் கடந்த புதன்கிழமை, பாலி தீவுக்கு வடக்கே குறித்த  நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கும் அந்நாட்டு இராணுவத் தளபதி, அக்கப்பலைக் கண்டுபிடிக்க போர் கப்பல்களை அனுப்பி இருப்பதாகவும், அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிடமும் கப்பலின் தேடுதல் பணிக்கு உதவி கேட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.