இந்திய மின் உற்பத்தி நிறுவனம் அனலைதீவில் பூமி பூஜை

91 இந்திய மின் உற்பத்தி நிறுவனம் அனலைதீவில் பூமி பூஜையாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப் பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

அந்நிலையில் இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் நேற்று அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.