இந்தியாவின் உதவி நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சியடையாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
ஒரு நிகழ்வில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் ஆதரவு நிராகரிக்கப்பட்டால், இலங்கை வளர்ச்சியடையாது, ஆனால் 2050 இல் இன்னும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்தியா நமது நெருங்கிய அண்டை நாடு. அது அமெரிக்கா, ரஷ்யா அல்லது சீனா அல்ல. எனவே இலங்கை செய்ய வேண்டியது இந்த உறவை சிறப்பாகப் பயன்படுத்துவதாகும். இலங்கை தனது வேலையை இந்தியா மூலம் செய்ய வேண்டும்.
அந்த நேரத்தில் இலங்கை 4.3 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறவில்லை என்றால், நமது நாடு என்னவாக இருந்திருக்கும்?” என்று அவர் பொருளாதார நெருக்கடியை நினைவூட்டி கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் அதானி குழுமத்தின் முதலீட்டு முயற்சி இலங்கைக்கு மேலும் பல முதலீடுகளைக் கொண்டு வந்ததாக ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். இந்தியா எங்கள் நட்பு நாடு. அவர்கள் எதற்கும் எங்களுக்கு உதவ தயாராக உள்ளனர். எனவே இந்த ஆதரவைப் பற்றிக் கொள்வதே எங்கள் ஒரே தீர்வு.
முதலீட்டை முன்னுரிமையாகக் கொண்டு இலங்கை முன்னேற இதுவே ஒரே வழி. இந்தியாவை நாம் நிராகரித்தால், நாம் ஒருபோதும் வளர்ச்சியடைய மாட்டோம்,” என்று அவர் எச்சரித்தார்.



