இந்தியாவுக்கு இன்று பயணமாகின்றார் மஹிந்த: முக்கிய தலைவர்களுடன் பேசுவார்

சிறீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இந்தியா செல்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனப் பிரதமர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்தியாவின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது சாரநாத், புத்தகயா மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மத வழிப்பாட்டுத் தலங்களுக்கும் பிரதமர் செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.