இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா திரும்ப முயன்ற 70 பேருக்கு பயணத்தடை

இந்தியாவிலிருந்து பயணிகள் அவுஸ்திரேலியா திரும்ப முடியாது என்ற இடைக்காலத் தடை நீக்கப்பட்ட பின்னர், முதலில் நாடு திரும்பவிருந்த 70 பயணிகள் பயணம் செய்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளார்கள்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட COVID சோதனையில், 40 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அந்தப் பயணிகளும், அவர்களுடன் கூடப் பயணிக்க இருந்தவர்களும் பயணிக்க முடியாது எனத் தடுக்கப் பட்டுள்ளார்கள்.