இது முதுகெலும்பற்ற அரசாங்கம் – பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்

முஸ்லீம் வைத்தியர் ஒருவர் 4000 சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை செய்ததாக ஒரு சிங்கள பத்திரிகையை மேற்கோள் காட்டி பரபரப்பாக செய்திகள் வெளியிடப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஆளும்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ,

ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு இனரீதியான மோதல்களைத் தூண்டும் வகையில் பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வகையில் 4000 சிங்களப்பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியில் எந்தவித உண்மையுமில்லை.

இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடும் தீவிரவாத ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாக முதுகெலும்பு அற்ற அரசாங்கமாக இது காணப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.Screen Shot 2019 05 23 at 1.58.56 PM இது முதுகெலும்பற்ற அரசாங்கம் - பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்