அவுஸ்திரேலியா வேண்டாம்- அகதிகளான தமிழ் தம்பதியரின் முடிவு

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரி சுமார் 8 ஆண்டுகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ள தம்பதியரான இரண்டு தமிழ் அகதிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து மீண்டும் நவுருத்தீவுக்கே திரும்பியிருக்கின்றனர்.
அகதிகளான இத்தம்பதியரின் ஆதரவாளர் ஒருவர், “அவர்கள் நவுருவில் முன்பிருந்த இடத்துக்கே திரும்புவதாக விருப்பம் தெரிவித்து திரும்பியிருக்கின்றனர். ஆனால் அந்த இடம் பழைய பாஸ்பேட் சுரங்கமாகும். அங்குள்ள சூழ்நிலை மோசமானது,” எனக் தெரிவித்துள்ளார்.