அவுஸ்திரேலியா-புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவு

ஏறக்குறைய 10,000 புகலிடக் கோரிக்கையாளர்களின் தனியுரிமையை மீறியதற்காக, உள்துறை அமைச்சு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவுருத்தீவில் செயல்படும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட 15 அகதிகள் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள விடுதிகளில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 2020ல் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்த 15 அகதிகள் சுமார் ஓராண்டாக Mercure Darwin Airport Resort எனும் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த 15 அகதிகளில் ஏழு பேர் பெண்கள் எட்டு பேர் ஆண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.