அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணை அடிமையாக வைத்திருந்த குற்றச்சாட்டு: மீண்டும் விசாரணை

மெல்பேர்னில் தமிழ் பெண்மணி ஒருவரை 8 ஆண்டுகளாக தமது வீட்டில் அடிமை போல வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள தம்பதியர் மீதான அடுத்தகட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

குறித்த தம்பதியரின் வீட்டில் 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பணிபுரிந்த இப்பெண்ணுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், அவரை தமிழ்நாட்டிற்கு திரும்பிச்செல்ல அனுமதிக்காமல் தமது வீட்டில் தொடர்ந்தும் அடிமைபோல வைத்திருந்தார்கள் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.