அறிவிப்பினை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு பூட்டு

மட்டக்களப்ப மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டவேளையில் மாநகரசபையின் அறிவிப்பினை மீறி திறக்கப்பட்ட கடைகள் மாநகரசபையினால் மூடப்பட்டன.

கொரனா அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் இன்று காலை 19மாவட்டங்களில் இன்று காலை 6.00மணி தொடக்கம் மாலை 4.00மணி வரையில் தளர்த்தப்பட்டது.

இந்தவேளையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பலசரக்கு நிலையங்கள்,மருந்துக்கடைகள்,பழம் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தது.IMG 7008 அறிவிப்பினை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு பூட்டு

இந்த நிலையில் இந்த அனுமதியை மீறி மஞ்சந்தொடுவாய் மற்றும் மட்டக்களப்ப நகரில் திறக்கப்பட்ட கடைகள் மட்டக்களப்பு மாநகரசபையினால் மூடப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் காரணமாக குறித்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.

இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்தில் மிகவும் குறைந்தளவு மக்களே பொருள் கொள்வனவில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.