அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி போராட்டம்

புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி இலங்கையின் 11 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தவிர்ப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் உணவு தவிர்ப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலவில் உணவு தவிர்ப்பில் ஈடுபடும் மறவன்புலவு சச்சிதானந்தம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப் பட்டால் மத மாற்றிகள் மூலம் சைவ சமயத்திலிருந்து வேறு மதத்திற்கு மக்கள் செல்லமாட்டார்கள் அத்தோடு சைவத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் பௌத்த மதமும் இந்து மதமும் பாதுகாக்கப்படும். இல்லாவிட்டால் இரண்டு மதங்களும் மதமாற்றிகளால் குறிப்பாக கிழக்கு இலங்கையில் மதமாற்றிகளின் செயற்பாடு அதிகரித்து காணப்படுகின்றது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.