அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் மோசடியில் ஈடுபட்ட திலினியை கூட தெரிவு செய்வார்கள் – தேர்தல் ஆணையாளர்

அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் திலினிபிரியமாலியை கூடதெரிவு செய்வார்கள் என  தேர்தல் ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள்; மிகவும் குறைந்தளவு அரசியல் அறிவை வெளிப்படுத்துகின்றார்கள் அரசியல் அறிவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என  அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் மிகவும் குறைந்தளவு அரசியல் விழிப்புணர்வு காணப்படுவதால் மோசடி சந்தேகநபர் திலினி பிரியமாலி போன்றவர் கூட நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார்.

பிரியமாலி நாளை தேர்தலில் போட்டியிட்டால் என்ன நடக்கும் ஆம் அவர் வெற்றி பெறுவார் நாட்டின் நிலைமை அவ்வளவு மோசமானதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் அறிவு அல்லது விழிப்புணபுர்வு என்பது மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது,இதனை உயர்த்துவதற்கு அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான அரசியலமைப்பு மாற்றங்களை கொண்டுவருவதற்கான  பொருத்தமான நபர்களை மக்கள் தெரிவு செய்வதற்கு மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கவேண்டும்,இதனை மாற்றாமல் எங்களால் ஊழல்மோசடி நிறைந்த அரசியல் முறைமையையோ அல்லது சமூகத்தையோ தெரிவு செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மொடல்கள் நடிகர் நடிகைகள் பாடகர்கள் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலமானவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் மக்கள்  அவர்களிற்கு அதிக வாக்குகளை வழங்குகின்றனர் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான நபர் ஒருவர் விடுதலையான பின்னர் தேர்தலில் போட்டியிட்டால் அவர் அதிக வாக்குகளை பெறும் வாய்ப்புள்ளது எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.