அம்பிகையின் கோரிக்கைக்கு ஓரணியில் வலுச் சேர்ப்போம் -ரெலோ இளைஞர் அணி

14 வது நாளாக நடாத்தி வரும் பிரித்தானிய வாழ் தாயக உறவு அம்பிகை செல்வக்குமார் அம்மையார் அவர்களின் கோரிக்கைக்கு  ஓர் அணியில் வலுச்சேர்க்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்கு சிறீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பராப்படுத்தும் தீர்மானத்துடன் பிரதான நான்கு கோரிக்கைகளை முன் வைத்து பிரித்தானிய அரசிடம் சாகும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை இன்றுடன் 14 வது நாளாக நடாத்தி வரும் பிரித்தானிய வாழ் தாயக உறவு அம்பிகை செல்வக்குமார் அம்மையார் அவர்களின் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் முகமாக தாயக, புலம் பெயர் தேசங்களில் வாழும் அனைவரையும் ஓரணியில் குரல் கொடுக்குமாறும் பிரித்தானியா உள்ளிட்ட கோ குறூப் நாடுகளின் கவனத்திற்கும் அவர்களின் ஆதரவையும் ஏற்புதலையும் பெற்று அம்பிகையின் உயிரை பாதுகாக்க ஒன்றிணையுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி கேட்டுக் கொள்கின்றது.

ஐெனிவா மனித உரிமைப் பேரவையில் நடைபெறும் 46 வது கூட்டத் தொடரில் வெளியான பூச்சிய அறிக்கைக்கு பின்னர் தமிழர்களின் எதிர் பார்ப்பான சர்வதேச நீதிப் பொறிமுறை தீர்மானத்தில் இடம்பெறவில்லை என்றவுடன் ரெலோ தலைமைக்குழு அதன் ஏமாற்றத்தையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்கா அரசை பாரப்படுத்தும் தீர்மானத்தை இறுதி வரைபில் உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ரெலோவின் பிரித்தானிய கிளை ஊடாக  21/02/2021 பிரித்தானிய வெளியுறவுச் செயலகத்திற்கு அனுப்பி உறுதி செய்துள்ளது.

அந்த வகையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பாதிக்கப்பட்ட எம் இனத்திற்கு சர்வதேச நீதிப் பொறிமுறைகள் ஊடாகவே நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் போது அம்பிகையின் அகிம்சை வழி போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதுடன்  யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு,வவுனியா போன்ற மாவட்டங்களில் நடைபெறும் வலுச் சேர்ப்பு உணவுத் தவிர்ப்பு போராட்டங்களுக்கு ரெலோ இளைஞர் அணி முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.

அத்துடன் 12/01/2021 வெளியான ஐ நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடையங்களை படித்து மனத் தையிரியம் அடைந்த பாதிக்கப்பட்ட எம் இனத்திற்கு பூச்சிய அறிக்கையும் இறுதி வரைபும் பாரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆனால் தொடர்ந்தும் எமக்கான நீதி கிடைக்கும் வரை சர்வதேச நீதிப் பொறிமுறைகளை தீர்மானமாக எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கோ குறூப் நாடுகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.