‘அம்பிகையின் கோரிக்கைகளுடன் ஒருங்கிணைந்து போராடுவோம்’ – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்காஅரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும், தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் பிரித்தானியாவில் திருமதி அம்பிகை செல்வகுமாரினால் மேற்கொள்ளப்படும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இந்த பத்தி எழுதும் போது 7 ஆவது நாளை கடந்துள்ளது.

1948 ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் தமது சுயநிர்ணய உரிமைக்காகவும், அடிப்படை உரிமைகளுக்காகவும், பறிபோகும் தமது தாயக பிரதேசத்தைக் காப்பாற்றுவதற்காகவும் தமிழ் மக்கள் பல வழிகளில் போராடி வந்துள்ளனர்.

PHOTO 2021 02 27 19 29 32 1 'அம்பிகையின் கோரிக்கைகளுடன் ஒருங்கிணைந்து போராடுவோம்' - வேல்ஸ் இல் இருந்து அருஸ்

அகிம்சைப்போர் என ஆரம்பித்த போராட்டத்தை சிறீலங்கா அரசு வன்முறை வழிகளை கையாண்டு தனது படை பலம்கொண்டு அடக்கியதுடன், பல தடவைகளில் அப்பாவிமக்களை இனக்கலவரங்கள் என்ற வழிகளில் படுகொலை செய்ததை தொடர்ந்து தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரிணமித்தது.

ஆயுதங்கள் மூலம் தமிழ் மக்கள் தம்மை பாதுகாத்துக் கொண்ட போதும், தமிழ் மக்களின் அந்த பாதுகாப்பை உடைப்பதற்கு உலக வல்லரசுகளும், பிராந்திய வல்லரசுகளும் சிறீலங்கா அரசுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை என்பது மிகப்பெரும் இனஅழிப்பாக மாற்றம் பெற்றது.

ஒருசமரை மட்டுமே இழந்த தமிழ் இனம் தொடர்ந்து பல்வேறுவழிகளில் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றது. ஆனால் சிறீலங்கா அரசும் உலக வல்லரசுகளும், பிராந்திய வல்லரசுகளும் தமிழ் மக்களின் இந்த போராட்டங்கள் மீதும்தொடர்ந்து அழுத்தங்களையும், தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றன.

தமதுஉரிமைகளுக்காகவும், இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் ஐக்கியநாடுகள் சபை வரை தமிழ்இனம் சென்றபோதும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்திலும், 2021 ஆம் ஆண்டு முன்வைக்கப்படும் தீர்மானத்திலும் சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனிதஉரிமை மீறல்கள் தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதை இந்தியாவுடன் இணைந்து மேற்குலகம் மிகவும் நுட்பமாக மறைத்துள்ளது என்பது தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான வழிகளை இந்த நாடுகள் நிராகரித்துள்ளதையே காட்டுகின்றது.

அதாவது இந்த நாடுகளின் நடவடிக்கை என்பது கடந்த 12 வருடங்களாக தமிழ் மக்கள் மேற்கொண்ட அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகளின் தோல்வியின் வெளிப்பாடாகும்.

Ambika2 'அம்பிகையின் கோரிக்கைகளுடன் ஒருங்கிணைந்து போராடுவோம்' - வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இந்தநிலையில் தான் அமைப்புக்கள் மற்றும்அரசியல் கட்சிகள் தவிர்ந்து மக்களாக முன்வந்து போராட்டத்தை முன்னெடுக்கும் கள நிலை ஒன்றுஉருவாகியுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்ற போராட்டமும், அம்பிகை அவர்களின் போராட்டமும் மக்கள் போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும்.

எனினும்அம்பிகை அவர்களின் போராட்டத்தினை தமிழ் மக்களை ஏமாற்றும் தீர்மானத்தை வரைந்ததில் முன்னிலை வகித்த பிரித்தானியா கண்டுகொள்ளவில்லை. அது மட்டுடல்லாது, பலஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மியான்மாரில் இடம்பெறும்போராட்டங்களை மணிக்கு ஒரு தடவை காண்பிக்கும் பிரித்தானியா ஊடகங்களும், அனைத்துலக ஊடகங்களும் பிரித்தானியா மண்ணில் இடம்பெறும் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.

எனினும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தாகயத்தில் வடக்கிலும், கிழக்கிலும், அனைத்துலக நாடுகளிலும் தமிழ் மக்கள் சுழற்சி முறையிலான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்தபோதும், இந்த போராட்டங்களுக்கு இடையில் ஒரு ஒருங்கிணைவு ஏற்படவில்லை என்பதை அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை கொண்டு நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. அம்பிகை முன்வைத்துள்ள 4 கோரிக்கைகளை முன்வைத்து எல்லா நாடுகளிலும் போராடும் போது தான் அவரின் போராட்டம் என்பது ஒரு ஒருங்கிணைந்த போராட்டம் என்ற கருத்துருவாக்கம் ஏற்படும்.

ஓவ்வொரு நாடுகளிரும், ஒவ்வொரு அமைப்புக்களும், கட்சிகளும் தமக்கு வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்து போராடும் போது அது தனிப்பட்ட போராட்டமாகவே பார்க்கப்படும். அது அம்பிகை அவர்களின் போரட்டத்தை பலவீனப்படுத்தும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.

அதுமட்டுமல்லாது, எந்தவித கட்சிகளும், அமைப்புக்களும் சாராது ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு புலம்பெயர் அமைப்புக்கள் உரிமை கோருவதை தவிர்த்து அதற்கான ஆதரவுகளை வழங்கவேண்டும் என்பதுடன், அதற்கான ஆதரவுகளை திரட்டுவதற்கும் முன்வரவேண்டும்.

கடந்த 12 வருடங்களாக நாம் மேற்கொண்ட இராஜதந்திர அரசியல் எங்கு தோற்றுப்போனது என்பதை தமிழ் மக்கள் அறிந்து கொண்டு செயற்படுவதன் மூலமே இந்த போராட்டங்களை அதன் இலக்கை நோக்கி நகர்த்த முடியும்.

image 7e69687fbb 'அம்பிகையின் கோரிக்கைகளுடன் ஒருங்கிணைந்து போராடுவோம்' - வேல்ஸ் இல் இருந்து அருஸ்

பெரும்பாலான புலம்பெயர் அமைப்புக்களைப் பொறுத்தவரையில், மேற்குலகம் சார்ந்த கருத்துக்கள் அல்லது ஆதரவான அமைப்புக்களாகவே உள்ளன. தாயகத்தில் உள்ள கட்சிகளை பொறுத்தவரையில்இந்தியா சார்பு நிலையே அங்கு அதிகம்.

அதற்கானகாரணம் என்ன?

தாயகத்தில்உள்ள இந்திய சார்பு தமிழ் கட்சிகள் தமது இருப்பை தக்கவைக்க இந்தியாவின் கருத்துக்களை அப்படியே உள்வாங்கி போராடுகின்றன. புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புக்களும், செயற்பாட்டாளர்களும், குறிப்பாக மேற்குலகம் சார்பாக அந்தந்த நாடுகளுக்கு சார்ப்பு நிலை எடுத்து தமதுசொத்துக்களையும், சுகமான வாழ்வையும் தக்கவைக்க போராடுகின்றனர். இவற்றுக்கு இடையில் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பது தான் உண்மை.

உண்மைஎன்பது கசப்பானது, ஆனால் அதனை ஏற்றுக்கொண்டால் தான்நாம் சரியான பாதையில் நகரமுடியும். இல்லையேல் ஏமாற்றுக்காரர்களை சுற்றிவந்து எமது வாழ்வு முடிந்துவிடும்.

இதனைசுருக்கமாக கூறுவதானால்இ ஒரு அடிபணிவு அரசியல்என கூறலாம். இந்த அடிபணிவு அரசியல்மூலம் எமக்கு தேவையானவற்றை பெறமுடியாது, மாறாக அவர்களின் கொள்கைகளுக்கு அமைவாகவே இந்த அமைப்புக்களும் கட்சிகளும் இயங்க முடியும்.

எனவேதான் தற்போது மெல்ல மெல்ல தமிழ் மக்கள் போராட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்ள தலைப்பட்டுள்ளனர்.

சிறீலங்காவை பொறுத்தவரையில் அனைத்துலக நாடுகளுடன் நல்லுறவை பேணுகின்றது. ஹிரோசிமாவில் அணுக்குண்டு வீசப்பட்டதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு யப்பானை நண்பனாக்கியது சிறீலங்கா.

கொரியப் போரின் போது கொழும்பு துறைமுகத்தை விநியோகத்திற்கு வழங்கி சீனாவையும், ரஸ்யாவையும் நண்பனாக்கியது சிறீலங்கா. உச்சக்கட்டப் போரின் போது 2007 ஆம் ஆண்டு திருமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு வழங்கி தமிழ் மக்களின் நடைமுறை அரசை அழித்து முடித்ததுசிறீலங்கா.

ஆனால் கிரம்பிளினில் உள்ள லெனின் சதுக்கத்தில் திருக்குறளை வைத்து தமிழுக்கு மரியாதை செலுத்தும் ரஸ்யாவை எதிரியாக பார்க்கின்றது தமிழ் சமூகம்.

2005 ஆம் ஆண்டு பெக்கன் நடவடிக்கை என திட்டம் போட்டு விடுதலைப்புலிகளை அழித்த மேற்குலகத்துடன் நட்பை பாராட்டி பணத்துக்காக ஆயுதங்களை விற்பனை செய்த சீனாவை எதிர்த்து அறிக்கை விடுகின்றன தமிழ் கட்சிகள்.

1976 ஆம் ஆண்டு எழுதப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது ரஸ்ய புரட்சியில் லெனின்தன்னாட்சிக்கு பயன்படுத்திய வசனங்களை தழுவியது என்பது எத்தனை பேருக்கு தெரியும். 1980கள் வரையிலும் சிறீலங்காவைஒரு தனிநாடாக ரஸ்யா ஏற்றுக்கொள்ளவில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

Moscow Grand Kremlin Palace3 'அம்பிகையின் கோரிக்கைகளுடன் ஒருங்கிணைந்து போராடுவோம்' - வேல்ஸ் இல் இருந்து அருஸ்

எமதுகட்சிகளினதும் அமைப்புக்களினதும் சுயநலவாத அரசியல் என்பது உலகில் பல நாடுகளின் ஆதரவுகளைஇழக்கும் நிலையை ஏற்படுத்தி வருவதுடன், நாம் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றோம் என்பதையும் தற்போது ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் மீண்டும் எடுத்தியம்பியுள்ளது.

அம்பிகையின்போராட்டத்திலாவது நாம் இதனை உணர்ந்தவர்களாக அவரின் கோரிக்கைகளை ஒற்றுமையாக அனைத்துலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நாடுகளிடையே பேதம் பார்க்காது உறவுகளை வலுப்படுத்துவோமாக இருந்தால் அதுவே நாம் சரியான பாதையில்பயணிப்பதற்கான முதல் படியாகும்.