அமெரிக்க டொலரை கைவிட சங்காய் கூட்டமைப்பு தீர்மானம்

வர்த்தகத்தின் போது அமெரிக்க டொலரை தவிர்த்து தமது நாணயங்களை பயன்படுத்துவது என சங்காய் கூட்டமைப்பைச் சேர்ந்த ரஸ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்த்தான் உட்பட்ட 8 நாடுகள் தீர்மானித்துள்ளன.

இன்று (19) மொஸ்கோவில் இடம்பெறும் நிதி அமைச்சர்களின் மாநாட்டில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இந்த கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் ரஸ்யா இந்த கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் அந்த நாடுகளின் நாயணத்தை பயன்படுத்தும் திட்டத்தை கொண்டுவந்திருந்தது.

சீனா, இந்தியா, ரஸ்யா, பாகிஸ்தான், கரிகிஸ்தான், தஜிகிஸ்த்தான், உபகிஸ்த்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இன்று ரஸ்யாவில் சந்திக்கின்றனர்.