அனைத்துலக நாணயநிதியத்துடன் முதற்கட்ட உடன்படிக்கையை எட்டியது இலங்கை

அனைத்துலக நாணயநிதியத்திற்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடந்த பேச்சுக்களில் முதற்கட்ட உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிவித்தல் நாளை (01) வெளியிடப்படும் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளோ அல்லது அனைத்துலக நாணயநிதியத்தின் அதிகாரிகளோ தகவல் எதனையும் வெளியிடாதபோதும், அதிகாரிகள் மட்டத்திலான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் மட்டத்திலான உடன்பாடு என்பது இலங்கை அரசுக்கு அனைத்துலக நாணய நிதியத்தின் நிதியை பெறும் உத்தரவாதத்தை வழங்கவல்லது. இலங்கை அரசு அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து அவசரமாக 3 பில்லியன் டொலர்களை எதிர்பார்த்து நிற்கின்றது.