விடுதலை புலிகள் மீதான தடை விவகாரம் – சுப்ரமணியன் சுவாமி எதிர்ப்பு

“விடுதலை புலிகள் மீதான தடையை இங்கிலாந்து ஆணையம் நீக்கியுள்ளது, தவறான புரிதலின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது” என பா.ஜ.காவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்து உள்துறை செயலாளர் மேல் முறையீடு செய்து இந்த தவறான உத்தரவை மாற்றி அமைப்பார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 21ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது என்ற பிரித்தானிய உள்துறை அமைச்சின் முடிவு சட்டவலுவற்றது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விஷேட ஆணையம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.