வவுனியாவில் கிணற்றிலிருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்பு

555 Views

வவுனியா, மகாறம்பைகுளம் – புளியடி பகுதியில் கிணற்றிலிருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்த மூதாட்டியை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதன்போது வீட்டிற்கு அண்மையில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் அவர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அன்னலட்சுமி (வயது 85) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply