நாம் ஆட்சிக்கு வந்தால் கருணாவை சட்டத்தின் முன் நிறுத்துவோம்

தமது அரசாங்கம் ஆட்சி அமைக்குமானால் கருணா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமக்கு அனைத்தையும் கூறுவதற்கான சுதந்திரத்தை தேர்தல் அலுவலகம் தந்துள்ளது.எதையும் பேசலாம் என்கின்றார் கருணா.

ஆனால் அப்படி யாருக்கும் அனுமதி இல்லை. இந்த நாட்டில் 3000இராணுவ வீரர்களை கொலை கூறும் கருணாவை நாம் ஆட்சிக்கு வந்தால் கருணாவை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் குறிப்பிட்டார்