ஜம்முவில் சிறைவைக்கப்பட்டுள்ள 150 ரோஹிங்கியா அகதிகள்: உச்சநீதிமன்றத்தில் மனு

ஜம்முவில் சிறைவைக்கப்பட்டுள்ள 150க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை விடுவிக்கவும் பாதுகாக்கவும் கோரியுள்ள மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த முகமது சலிமுல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, இது தொடர்பான விசாரணை வரும் மார்ச் 25ம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.