சிறிலங்காவின் எந்தவொரு நிலத்தையும் அமெரிக்கா கட்டுப்படுத்தாது

மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டின் மூலம் சிறிலங்காவிந் எந்தவொரு பகுதியையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமாட்டாது என அமெர்க்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்க உதவுவதன் மூலம் சிறிலங்காவின் வளர்ச்சியில் பங்களிக்க அமெரிக்கா விரும்புகின்றது. புனரமைக்க முன்மொழியப்பட்ட அனைத்து வீதிகளின் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டை சிறிலங்காவே வைத்துக் கொள்ளும். எந்தவொரு நிலத்தையும் அமெரிக்கா சொந்தமாகவோ, கட்டுப்படுத்தவோ, நிர்வகிக்கவோ மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.