காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்: விக்கினேஸ்வரன் ஆதரவு

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றிலில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் மாபெரும் கண்டனப் போராட்டத்துக்கு வடக்கு முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வீ. விக்னேஸ்வரன் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் பெருந்தொகையானவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.