காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக மீண்டும் சோனியா

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் சோனியா காந்தி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவரை ஏகமனதாக தெரிவு செய்தனர்.

கடந்த மக்களவையில் காங்கிரஸ் குழு தலைவராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே, இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.