ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த நரேந்திர மோடி கேள்விகளை எதிர்கொள்ளவில்லை

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (17) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இருந்தும் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

செய்தியாளரின் கேள்விகளுக்கு பாரதிஜ ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா வே பதிலளித்தார். செய்தியாளரிடம் பேசிய பிரதமர் மோடி தெரிவிக்கையில், கடந்த இரு மக்களவை தேர்தல்களின் போதும் (2009, 2014)  ஐ.பி.எல் போட்டிகளைக்கூட நடத்த முடியவில்லை.

அரசாங்கம் வலுவாக இருந்தால், ஐ.பி.எல், ரம்ஸான், பாடசாலைத் தேர்வுகள் என அனைத்தும் அமைதியாக நடக்கும் என்று கூறினார்.