லெபனான் புதிய அதிபராக முஸ்தபா தேர்வு

லெபனான் புதிய அதிபராக முஸ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்களில் கடந்த ஓகஸ்ட் மாதம் 2750 தொன் அளவுள்ள அமோனியம் நைத்திரேட் மருந்து வெடித்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்தில் 200இற்கும் அதிகமானோர் பலியாகியதுடன் 6ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 3இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்த வெடிவிபத்திற்கு ஆளும் அரசின் அலட்சியம் தான் காரணம் எனவும் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து பிரதமர் ஹசன் டெய்ப் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். அத்துடன் அவரது அமைச்சர்களும் இராஜினாமாச் செய்திருந்தனர்.

இதற்கிடையில் புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்காக லெபனான் அதிபர் மைக்கேல் ஆவோன், பார்லி சபாநாயகர் நபிப் பெர்ரியை சந்தித்துப் பேசினார்.  இதையடுத்து புதிய பிரதமராக முஸ்தபா அதிகாரப்புர்வமாக தெரிவு செய்யப்பட்டார். இவர் லெபனானுக்கான ஜேர்மனியின் தூதுவராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.