புதிய வடிவம் எடுக்கும் பயங்கரவாத தடைச் சட்டம்

தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தப் புதிய சட்ட வரைபை அமைச்சர்கள் திலக் மாரப்பன, சம்பிக்க ரணவக்க, தலதா அத்துக்கோரள ஆகியோர் முன்வைத்தனர்.

இங்கிலாந்து, இந்தியா நாடுகளில் நடைமுறையிலிருக்கும் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டே புதிய பயங்கரவாத தடைச்சட்டம் வரையப்பட்டுள்ளது.

மேலும் புதிய சட்டத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.