தமிழகத்தை புறம்தள்ள இந்திய மற்றும் சிறீலங்கா அரசுகள் திட்டம்

பலாலி விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியளவில் இந்தியப் பிராந்திய நகரங்களுக்கு விமான சேவை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், பலாலியிலிருந்து சென்னைக்கு விமான சேவைகள் இடம்பெறாது என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கும் போது, நான்கு இந்திய நகரங்களுடனான இணைப்புக்களைக் கொண்ட இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மாறும். இருந்தாலும் தமிழ்நாட்டின் சென்னை விமான நிலையத்திற்கு பலாலியிலிருந்து விமான சேவைகள் நடைபெற மாட்டாது.

2.5 பில்லியன் செலவில் புனரமைக்கப்படும் பலாலி விமான நிலையத் திட்டத்திற்கு 300 மில்லியனை இந்தியா வழங்குகின்றது.

ஒக்டோபர் 15இல் விமான நிலையம் திறக்கப்படும் போது, சிறிய வணிக விமானங்கள் பெங்களுர், கொச்சி, முப்பை மற்றும் ஹைதரபாத் ஆகிய நகரங்களிற்கு சேவையை ஆரம்பிக்கும்.