சிறீலங்காவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 771 ஆக அதிகரிப்பு

சிறீலங்காவில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 771 ஆக இன்று (5) அதிகரித்துள்ளதாக சிறீலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 549 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 213 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, சிறுவர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நாளை சிறீலங்கா அரசு பிற்போட்டுள்ளது. உயர்தர மற்றும் மேல் வகுப்பு மாணவர்களுக்கான பாடசாலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள போதும் அதற்கான நாளை அறிவிக்கவில்லை.