சரிவடைந்துள்ள சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தம்மால் உதவிகளை வழங்க முடியும் என அனைத்துலக வர்த்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்திக்கான முக்கிய வழிகளை முடக்கி வைத்திருப்பதே தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கான காரணம். இது எல்லா துறைகளிலும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகின்றது.
கொரோனாவை கட்டுப்படுத்துதல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்களில் அனைத்துலக வர்த்தக சம்மேளனம் சிறீலங்கா அரசுக்கு உதவிகளை வழங்கும் என அது மேலும் தெரிவித்துள்ளது.