இயக்கச்சி பகுதியில் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர் மரணம்

கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்தவர் இன்று (8) மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான 44 வயதுடைய நபரே இன்று அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்ர்து சிறீலங்கா அரச படையினர் அவரின் மனைவியையும், மேலும் இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

தேர்தல் காலங்களிலும், அனைத்துலக சமூகத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலமைகள் ஏற்படும்போதும் சிறீலங்கா அரசு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது வழமையாகிவிட்டதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.