புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது. நாடாளுமன்றம் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு கலைக்கப்பட்டது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் நேற்று நள்ளிரவு வெளியான இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது
இதற்கான வேட்பு மனுக்கள் மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.