”இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தவறான கொள்கைகளே காரணம்” முன்னாள் நிதி அமைச்சர்  ப.சிதம்பரம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என்று இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர்  ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படலாம். மத்திய அரசு தொடர்ந்து தவறான பொருளாதார கொள்கைகளை கொண்டு இருந்தால் இந்தியாவும் பொருளாதார நெருக்கடி சந்திக்கும் அபாயம் உள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கும் பொருளாதார நெருக்கடிக்கும் தவறான கொள்கைகளே காரணம்” என்றார்.

Tamil News