புத்தாண்டில் இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகம் என்ன? ஆபத்தான சமிக்ஞைகள் என்கிறார் கலாநிதி தயான்

இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகம்
புத்தாண்டில் இலங்கை அரசியல், மற்றும் கட்டமைப்புக்களில் இலங்கை இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகம் தொடர்பான ஆபத்தான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ளன என்று கலாநிதி தயான் ஜயத்திலக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

1931 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக நாடாக அடையாளப்படுத்தி வரும் இலங்கையில் இராணுவம் வெளிப் படுத்தியுள்ள சமிக்ஞைகள் 2022 ஆம் ஆண்டு ஆபத்தான நிலைமைகளை நோக்கியதாக அமைந்துள்ளன. புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தினது நாட்காட்டியும், நாட்குறிப்பும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட் டவர்களுக்கு பகிரப்பட்டது. இதில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் புகைப்படம் பொறிக் கப்பட்டு ஆங்காங்கே பல்வேறுபட்ட பொன்மொழிகளும், பழமொழிகளும் பதிப்புச் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, பழமொழிகள் மற்றும் பொன்மொழிகள் சார்லஸ் டிக்கன்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்க ளினது பொன்மொழிகளும் காணப்படுகின்றன. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, “இலங்கை இராணுவம் வளமான மற்றும் நிலையான தேசத்தை உரு வாக்கி பராமரிக்கும் திறன் கொண்டது’ என்ற வாசகம் பதிப்புச் செய்யப்பட்டுள்ளது. இவ்விதமான வாசகத்தை சீனவோ, ராஷ்யாவோ வெளிப்படுத்தவில்லை. குறி;ப்பாக இராணுவமான மக் கள் சீனப் படையோ அல்லது ரஷ்யா இராணுவமோ கூட வெளிப்படுத்தியது கிடையாது.

அவ்வாறிருக்கையில், இலங்கை இராணுவம் முதன்முதலாக தேசத்தை பாதிப்பது உள்ளிட்ட விட யத்தைக் குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் இவ்வித மாக பிரஸ்தாபிக்காத இராணுவம் இப்போது தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதன் பின்னணியை கூர்ந்து அவதானிக்க வேண்டியுள்ளது. அதுநேரம், கிளிநொச்சிக்குச் சென்ற இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அங்கு புதிதாக நிறுவப்பட்ட கோப்ஸ் கட்டமைப்பினரைச் சந்தித்தபோது பசுமை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் அது குறித்த விழிப்புணர்வுகளை விவசாயிகளுக்கு வழங்கு வதற்கும், இராணுவம் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளதோடு ஜனாதிபதி கோட் டாபய ராஜபக்வின் இலக்கை நோக்கி நகர்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் உரை யாற்றி உள்ளார்.

இவ்விதமான நிலைமைகள் எல்லாம் அடுத்த ஆண்டு இராணுவம் எவ்விதமாகச் செயற்பட போகின் றது. அதன் வகிபாகம் என்ன என்ற சமிக்ஞைகளை தெளிவாக வெளிப்படுத்துவனவாக உள்ளது. அதே நேரம், ஜனநாயக நாடொன்றில் இராணுவத்தின் இவ் விதமான பிரதிபலிப்புக்கள் மிகவும் ஆபத்தானவை“ என்றார்.

Tamil News