வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் இருக்கும் போதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பு இதுதானா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி.
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர அவர்கள் அலுவலகத்தில் பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அவர் மீது துப்பாக்கி சூடு நடந்தப்பட்டுள்ளது. தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது இதுதான் உங்கள் தேசிய பாதுகாப்பா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.