உதவிப்பொருட்களை ஆயுதங்களாக்குதல் – நூற்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் கண்டனம்

பொதுமக்களின் உயிர்க ளைக் காக்கும் உதவிப்பொருட்களை காசாவிற்கு அனுப்பு வதை இஸ்ரேல் தடுத்து வருவதற்கு எதிராக நூறுக்கும் மேற்பட்ட உதவி அமைப்புகள் தங்களது எதிர்ப்புக்களைத் தெரி வித்துள்ளன.
இஸ்ரேலின் இந்த நடவடிக் கைகளால் எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள உதவிப்பொருட்களின் களஞ்சியங் களில் பெருமளவான நிவாரணப் பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன. ஆனால் பாலஸ்தீனிய மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை இஸ்ரேல் முற்று கையிட்டுள்ள நிலையில், காசாவின் எல்லைகளில் உதவி லாரிகள் குவிந்துள்ளன. மேலும் உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் நுழைவதைத் தடுக்க இஸ்ரேல் புதிய விதிகளைப் பயன்படுத்தி வருகிறது என்று குழுக்கள் வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
காசாவிற்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளுக்குத் தடைகள் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளபோதும், கடந்த மார்ச் மாதம் 2 ஆம் நாளில் இருந்து அனைத்துலக அரசு சார்பற்ற நிறுவனங்களால் ஒரு லாரி உணவுப் பொருட்களைக் கூட அனுப்ப முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வளர்ந்து வரும் பொருட்களின் தேக்கத்தை அகற்றுவதற்குப் பதிலாக, இஸ்ரேலிய அதிகாரி
கள் டஜன் கணக்கான அரசு சாரா நிறு வனங்களின் உயிர்காக்கும் பொருட்களைக் கொண்டு வருவதற்கான கோரிக்கைகளை நிராகரித்துள்ளனர். இந்த அமைப்புகளுக்கு ‘உதவி வழங்க அதிகாரம் இல்லை’ என்று காரணம் காட்டியுள்ளனர். எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் (MSF) மற்றும் ஆக்ஸ்பாம் ஆகியவை இதில் அடங்கும்.
பல தசாப்தங்களாக காசாவில் பணியாற்றி வரும் நிவாரண அமைப்புகளிடம், புதிய “பதிவு விதிகள்” காரணமாக உதவி வழங்க “அங்கீகாரம்” இல்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இதில் “பாதுகாப்பு” சோதனையும் அடங்கும். இதன் விளைவாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் இப்போது அடிப்படைப் பொருட்கள் இல்லாமல் உள்ளன. மேலும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் “இறந்து வருகின்றனர்”.
“இராணுவமயமாக்கப்பட்ட உணவு விநியோகத் திட்டம் பட்டினியையும், துன்பத் தையும் ஆயுதமாக்கியுள்ளது. GHF தளங்களில் விநியோகம் தீவிர அளவிலான வன்முறை மற்றும் கொலைகளுக்கு வழிவகுத்துள்ளது. முதன்மையாக இளம் பாலஸ்தீனிய ஆண்கள், ஆனால் உணவு பெறும் நம்பிக்கையில் தளங்களுக்குச் சென்ற பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட,” என்று காசாவில் உள்ள MSF இன் அவசர ஒருங்கிணைப்பாளர் ஐடர் ஜபல்கோகியாஸ்கோவா கூறினார்.
மே மாதத்திலிருந்து GHF விநியோக தளங்களைச் சுற்றி உதவிப் பொருட்களை அணுக முயன்ற குறைந்தது 859 பாலஸ்தீனியர்கள் கொல் லப்பட்டுள்ளனர். அறிக்கையில் கையெழுத்திட்ட 100க்கும் மேற்பட்ட நிவாரண அமைப்புகள், இஸ்ரேல் அதன் “உதவி ஆயுதமாக்குதலை” நிறுத்தவும், இஸ்ரேல் அதன் “அதிகாரத்துவத் தடையை” முடிவுக்குக் கொண்டு வரவும், காசாவிற்கு உயிர்காக்கும் மனிதாபிமான உதவிகளை நிபந்தனையின்றி வழங்கவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன.