அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான ‘USS Spruance’ என்ற கப்பல் இன்று திங்கட்கிழமை (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த கப்பலானது விநியோகம் மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
160 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் சுமார் 338 பணியாளர்கள் கடமை புரிகின்றனர்.
Commander Thomas Adams இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாவார்.
இந்த கப்பலானது நாளை செவ்வாய்க்கிழமை (20) கொழும்பு துறைமுகத்தை விட்டு மீண்டும் புறப்படவுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.