யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனாவால் பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் நோயால் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதன்மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நயினாதீவைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வெள்ளாந்தெருவைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரும் கொரோனாவால் நேற்று உயிரிழந்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 291ஆக உயர்வடைந்துள்ளது