திருமலை மாவட்ட ஆயர்,விக்னேஸ்வரன் சந்திப்பு;காளி கோவிலுக்கும் சென்றார்

தேர்தல் பிரசாரத்துக்காக சென்றுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் அவர்களை மரியாதையின் நிமித்தம் சந்தித்து உரையாடியனார். அவருடன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அத்துடன் திருக்கோணாமலை காளி அம்மன் ஆலயத்துக்கு சென்று அவர் வழிபட்டுள்ளார் . திருகோணமலை மாவட்டதில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரூபன் உட்பட ஏனைய வேட்பாளர்களும் இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.kali திருமலை மாவட்ட ஆயர்,விக்னேஸ்வரன் சந்திப்பு;காளி கோவிலுக்கும் சென்றார்