“உணவின் தரம் வாழ்க்கையை பாதுகாக்கும்” உலக உணவு பாதுகாப்பு தினம் இன்று

“உணவின் தரம் வாழ்க்கையை பாதுகாக்கும்” என்பது இந்த ஆண்டின் தொனிப்பொருளாகும்.

உணவினால் ஏற்படும் ஆபத்துகளை தடுத்தல், அடையாளம் காணுதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட விடயங்களில் அவதானம் செலுத்துதல் உலக உணவு பாதுகாப்பு தினத்தின் நோக்கமாகும்.

மக்களுக்கு நஞ்சற்ற உணவை வழங்குவதற்கு உற்பத்தியாளர்கள், பொதி செய்பவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் கடமைப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இரேஷா மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த பொறுப்புகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாத நிலையில் உணவின் தரம் தொடர்பாக பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளதாக இரேஷா மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.