தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிப்பாற்கு தடைவிதித்ததையடுத்து தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி, ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதனால் பெருமளவில் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
அதே நேரம் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்திலும் உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பம் நடைபெற்று வருகின்றது.