6 ஆண்டுகளாக கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும்  போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் அதை நினைவு படுத்திய போராட்டம் ஒன்று (20) இன்றைய தினம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி  கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து ஏழாவது ஆண்டு ஆண்டில் கால் பதிக்கின்றது.

இந்த நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஆறு வருடங்களை நினைவுபடுத்து முகமாக இன்றைய தினம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கந்தசாமி கோவில் முன்னிலையில் இருந்து கிளிநொச்சி டிப்போ சந்தி வரை ஏ9 வழியாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெற்றோர் கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பிய வாறு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.