முதல் தொகுதி அரிசி கப்பலில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Zhao Lijiang தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த மனிதாபிமான 500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துகளின் முதல் தொகுதி அண்மையில் ஹொங்கொங்கில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.