ஜப்பானின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலை திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

ஜப்பானின் ஜெய்கா (JICA )ஆதரவுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த 12வேலை திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஜெய்கா அமைப்பு என்னை வந்து சந்தித்தது. சந்தித்து கடிதம் கொடுத்தனர். இப்போது நம் நாடு மோசமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், எம்மால் கடனை அடைக்க முடியாது, எனவே IMF வந்து இதற்கான திட்ட வரைபடத்தை உருவாக்கும் வரை, இந்த Taisei திட்டம் மட்டுமல்ல, ஜப்பான் மற்றும் JICA ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் 12 திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தனர்.

இந்த கடனை எங்களுடன் மறுசீரமைக்க IMF அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் பின், அவர்கள் மீண்டும் அந்தப் பணத்தை எங்களுக்குத் தருவார்கள் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.