அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் இடைநிறுத்தப் படவில்லை – தமிழரசு செயலாளர்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனம் அம்பாறை- நாவிதன்வெளி பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் த.கலையரசனுக்கு வழங்கப்பட்டதாக கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்டிருந்தமை நாமறிந்ததே.

நிலையில் இந்த முடிவு இடைநிறுத்தப் பட்டுள்ளதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.தேசிய பட்டியல் ஆசனத்தினை கலையரசனுக்கு வழங்கும் தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தாமதப்படுத்துமாறு கட்சியின் செயலாளருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பினால் உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கின்றது எனவும் அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் எமது மட்டக்களப்பு செய்தியாளர்,தமிழரசு கட்சி செயலாளர் திரு.துரைராஜசிங்கம் அவர்களை தொடர்புகொண்டு இது தொடர்பில் கேட்டபோது ”அவ்வாறான எந்த முடிவு மாற்றமும் இடம்பெற வில்லை” என தெரிவித்தார்.