இலங்கையில் போராட்டம் தொடரும்: ஆசிரியர் சங்கம்

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலகும் வரை நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டங்கள், முழு அடைப்பு நடத்துவது தொடர்பாக, தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கலந்துரையாடப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.