ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

ஜனாதிபதியும் பிரதமரும் மக்களை ஏமாற்ற முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை விட இந்த நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என அதன் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகாத நிலையில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் காலிமுகத்திடல் பிரதிநிதிகள் மத்தியில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.